விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் சரவணன், துரத்தப்படும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி 2’ தொடரில், விவாகரத்து பத்திரத்தில் சரவணன் கையெழுத்திட்டு சந்தியாவை வீட்டை விட்டு வெளியே துரத்த, முழு குடும்பமும் நடப்பது தெரியாமல் திகைத்தவாறு இருக்கும் வகையில் இந்த வாரத்துக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜா ராணி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீரியலில் தற்போது வரை ஒளிபரப்பாகி இருக்கும் எபிசோடில் பார்வதியின் திருமண நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிகிறது. இதை தொடர்ந்து வரவுள்ள மற்ற எபிசோடுகளுக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் பார்வதியின் படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது, அதற்கு பின்பு பார்வதி மற்றும் பாஸ்கர் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என பாஸ்கர் குடும்பத்தினர் கூறிவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.
OLA E – Scooter விற்பனை தள்ளிவைப்பு – செப்.15 முதல் தொடங்கும்! முழு விபரம் இதோ!
கூடவே சந்தியா சொன்ன பின்பு எங்களுக்கு அது தான் சரி என்று தோன்றியது என அவர்கள் சொல்ல, சிவகாமியின் மொத்த கோபமும் சந்தியா பக்கம் திரும்புகிறது. நடந்ததை அறியாமல், ஏன் இப்படி பண்ண என்று சிவகாமி சந்தியாவை கத்த, நான் எதுவும் பண்ணல என சந்தியா கூறுகிறார். அப்போது எல்லாவற்றையும் அமைதியாக கவனித்து கொண்டிருந்த சரவணன், ஒரு நிமிஷம் எல்லாரும் நிறுத்துங்க என கூறிவிட்டு சந்தியாவை இழுத்துக்கொண்டு அவர்களுடைய ரூமுக்கு செல்கிறார்.
Royal Enfield Meteor 350 மாடல்களின் விலை திடீர் அதிகரிப்பு – புதிய விலை பட்டியல் வெளியீடு!
அங்கு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் சரவணன், அதை சந்தியாவிடம் கொடுத்து வீட்டை விட்டு வெளியே போங்க என கூற சந்தியா அதிர்ச்சியாகிறார். பின்னர் பத்திரத்தை கையில் வாங்கி கொண்டு அழுது கொண்டிருக்கும் சந்தியாவை பார்த்து, சரவணனும் கண் கலங்க இந்த வாரத்துக்கான ப்ரோமோ முடிகிறது. இப்போது சந்தியா வீட்டை விட்டு வெளியேறுவாரா அல்லது சரவணன் குடும்பத்தினர் அவரை தடுப்பார்களா? என்பது தான் ‘ராஜா ராணி’ சீரியலின் இந்த வாரத்துக்கான கதைக்களமாக ஒளிபரப்பாக இருக்கிறது.