சென்னைக்கு கிளம்பும் சரவணன், வருத்தத்தில் இருக்கும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சரவணன் சென்னைக்கு கிளம்ப சந்தியாவும் உடன் வர வேண்டும் என சரவணன் சொல்கிறார். சரவணன் தோல்வி அடைய கூடாது என கடவுளிடம் சிவகாமி வேண்டிக் கொள்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் பெரிய சமையல் போட்டியில் கலந்து கொள்ள சென்னை கிளம்புகிறார். அப்போது அங்கே புது இடமாக இருக்கும் எனக்கு கஷ்டமாக இருக்கும் என சந்தியாவை உடன் வர சொல்லி அழைக்கிறார். ஆனால் சந்தியா முடியாது அத்தை திட்டுவாங்க என சொல்ல, சரவணன் நான் அம்மாவிடம் பேசுகிறேன் நீங்க தான் வர வேண்டும் என துணி எடுத்து வைக்க சொல்ல, சந்தியா ஏற்கனவே துணிகளை எடுத்து வைத்திருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி போலவே தோற்றமளிக்கும் நடிகை வினுஷா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
அதை பார்த்த சரவணன் கிண்டல் செய்ய சரி நீங்க வர வேண்டாம் என சொல்கிறார். அதெல்லாம் இல்லை நான் வருவேன் என சந்தியா சொல்கிறார். மறுபக்கம் அர்ச்சனா நான் மட்டும் இந்த வீட்டிற்குள்ளவே இருக்க அவங்க நல்ல சென்னைக்கு ஹனிமூன் போறாங்க என சொல்கிறார். சென்னை கிளம்ப சரவணனிற்கு தேவையான பொருள்களை சிவகாமி எடுத்து வைக்கிறார். எப்போது டிவியில் வருவீங்க என கேட்க, நீ வேற ஏன் என்ன சர்க்கரையிடம் சரவணன் சொல்கிறார்.
பின் சந்தியா அழைத்து சரவணனிடம் சென்னை மேப் காட்ட சென்னை பற்றி சந்தியா விளக்கமாக சொல்கிறார். அப்போது சிவகாமி வர முதல்முறையாக வெளி ஊருக்கு போறான் சீக்கிரமாக தூங்குங்க என சொல்கிறார். சந்தியா பாவம் அத்தை என நினைத்து பார்க்க சிவகாமி சாமி கும்பிட்டு அழுது கொண்டு இருக்கிறார். சந்தியா ஏன் என கேட்க, அவன் தோற்று போக கூடாது என சிவகாமி வருத்தப்பட்டு அழுகிறார். ஏற்கனவே சரவணன் ஒரு போட்டியில் கலந்து கொண்டு அதில் தோல்வி அடைந்ததால் மிகவும் வேதனைப்பட்டான். அதனால் அவனை மீண்டும் அப்படி பார்க்க கூடாது என சிவகாமி அழுகிறார். சந்தியா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.