![சந்தியாவின் கனவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகாமி, சரவணன் எடுக்கப்போகும் சந்தியாவின் கனவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகாமி, சரவணன் எடுக்கப்போகும் அதிரடி முடிவு - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/சந்தியாவின்-கனவிற்கு-எதிர்ப்பு-தெரிவித்த-சிவகாமி-சரவணன்-எடுக்கப்போகும்.jpg)
சந்தியாவின் கனவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகாமி, சரவணன் எடுக்கப்போகும் அதிரடி முடிவு – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவின் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை தெரிந்து கொண்ட சரவணன் அடுத்து எடுக்க போகும் திருப்பங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் கதை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. சந்தியாவின் அப்பா அம்மாவை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் தான் சந்தியாவின் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். அப்போது தனது மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என சொல்லி பேனாவை கொடுத்து இருக்கிறார். சரவணன் அதை பத்திரமாக வைக்க அவருடைய அப்பாவிடம் அது பற்றி பேசுகிறார். அப்போது உனக்கும் சந்தியாவிற்கு பூர்வ ஜென்மம் பந்தம் இருப்பதாக அவர் சொல்கிறார்.
அதனால் சரவணன் சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார். அது பற்றி சந்தியாவிடம் பேச அத்தைக்கு பிடிக்காது அதனால் அந்த ஆசை வேண்டாம் என சந்தியா சொல்கிறார். சரவணன் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அதை கேட்டு சந்தியா சந்தோசமாக இருக்க, சரவணன் சந்தியாவிற்கு போலீஸ் தொப்பியை அணிந்து பார்த்து உங்களுடைய ஆசை கட்டாயம் நிறைவேறும் என சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இனி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சரவணனின் சந்தியாவாக நடிகை ஸ்ரேயா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
அதில் சிவகாமி சாமி கும்பிட்டு இருக்க, சரவணன் வந்து சிவகாமியிடம் சந்தியாவின் ஆசை பற்றி பேசுகிறார். சந்தியாவின் அம்மா அப்பா பெரிய போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அதை நான் செய்ய போகிறேன் என சொல்ல, நம்ம குடும்பத்திற்கு போலீஸ் என்றாலே பிடிக்காது அதிலும் என்னுடைய மருமகளை போலீசாக ஆக்க போறீயா என சிவகாமி கேட்க, அதெல்லாம் சரியாக வராது இந்த எண்ணத்தை அப்படியே விட்டுவிடு என சிவகாமி சொல்கிறார். சரவணன் எடுக்க போகும் அடுத்தகட்ட முடிவு என்ன என்று இந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது.