சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசு பரிசீலனை!

0
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் - அரசு பரிசீலனை!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் - அரசு பரிசீலனை!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசு பரிசீலனை!

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,000 நிவாரணமாக வழங்க அரசு பரிசீலித்து வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

மழை நிவாரணம்

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக மழை, அதன் மூலமாக உருவாகும் வெள்ள பாதிப்புகள் வரலாறு காணாத இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதரத்தை அழித்து போட்டது. இப்போது இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – பேரிடர் கால முக்கிய கோரிக்கை!

இதன் மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும்பான்மையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக பல வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.2,000 வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னையில் தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தின் போது ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு வழங்கல்துறை ஆணையர் சுற்றறிக்கை!

அந்த வகையில் தற்போதும் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 அல்லது ரேஷன் பொருட்களை நிவாரணமாக வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அதனால் ஒவ்வொரு பகுதி வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!