ரயில் டிக்கெட் வாங்க இனி வரிசையில் நிற்க வேண்டாம் – ரயில்வேயின் புதிய வசதி!

0
ரயில் டிக்கெட் வாங்க இனி வரிசையில் நிற்க வேண்டாம் - ரயில்வேயின் புதிய வசதி!

மக்கள் அதிகமாக UPI பண பரிவர்த்தனைகளை செய்ய தொடங்கி உள்ள நிலையில், ரயில்வே டிக்கெட் வாங்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே வசதி

மக்கள் தற்போது அதிகமாக ஆன்லைன் மூலம் பணம் செலுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக பயணங்களின் போது கையில் பணம் வைத்துக் கொள்ளாமல் UPI மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் UPI மூலம் பொது டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்ய இனி டிஜிட்டல் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பொது டிக்கெட்டுகளை வாங்கலாம்.

மத்திய அரசின் ஊழியர்களுக்கு இத்தனை அலவன்ஸ் இருக்கா? – முழு விவரம்!

இது குறித்து ஏசிஎம் விஷால் சுக்லா கூறுகையில், பணம் செலுத்துவதற்கான டிஜிட்டல் க்யூஆர் குறியீட்டை ரயில்வே அங்கீகரித்துள்ளது. பொது டிக்கெட் சாளரத்தில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகள் இப்போது UPI மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த முடியும். இந்த வசதி மொராதாபாத்தில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பதால் சிலர் ரயிலை தவற விடுகின்றனர். எனவே இனி எளிமையாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி இனி டிக்கெட் வாங்கலாம். இது தவிர பல நன்மைகள் UPI மூலம் டிக்கெட் எடுப்பதால் கிடைக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!