ராதிகா, கோபி திருமணம் பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
ராதிகா, கோபி திருமணம் பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
ராதிகா, கோபி திருமணம் பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
ராதிகா, கோபி திருமணம் பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

ராதிகாவை திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது கணவர் தனது நெருங்கிய தோழியான ராதிகாவை தான் திருமணம் செய்யப் போகிறார் என்று அனைத்து உண்மைகளையும் பாக்கியா தெரிந்து கொண்டார்.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்தவகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்யும் நோக்கில் கோபி இருந்து வருகிறார். இதனால் பாக்கியாவிற்கு தெரியாமலேயே கோபி பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார்.

TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு – மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதன்பின்பு பாக்கியாவையும் கோபியையும் நீதிமன்றத்தில் ஆஜராக கூறி நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. நீதிமன்றத்திற்கு சென்ற பாக்கியா நீதிமன்றத்தில் விவாகரத்துகாக காத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்து பரிதாபம் கொள்கிறாள். தனக்கு தான் விவாகரத்து ஆகப்போகிறது என்று கூட தெரியாமல் பாக்கியா அப்பாவி பெண்ணாக இருந்து வருகிறார். பாக்கியாவிற்கு அனைத்து விஷயங்களும் தெரிந்துவிட்டால் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என பயந்து பாக்கியாவை கோபி நீதிமன்றத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

இதன்பின்னர் பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு எதர்ச்சியாக செல்கிறார். வீட்டிற்குள் நுழைந்ததும் பாக்கியா வீட்டில் வேலை செய்யும் செல்வி பாக்கியாவிடம் இந்த வீட்டில் வேறு யாரோ தங்கியிருப்பதாக கூறுகிறார். அதற்கு ராதிகா ஆம் நானும் எனது நண்பரும் தற்போது தொடர்பில் இருந்து வருகிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் எனக் கூறுகிறார். அதனைக் கேட்ட பாக்கியா உடனே நல்ல விஷயம்தான். இந்த கணவர் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார் என ஆறுதல் வார்த்தைகள் பேசுகிறார்.

வீட்டிற்கு பாக்கியாவும் செல்வியும் வந்திருப்பதை பார்த்து கோபி வீட்டிற்குள்ளேயே மறைந்து கொள்கிறார். பின்பு பாக்கியாவும் செல்வியும் வீட்டை விட்டு கிளம்பி விடுகின்றனர். அங்கு இருந்த காரை பார்த்து செல்வி இது சாருடைய கார் தானே எப்படி ராதிகா வீட்டிற்கு வந்திருக்கும் என சந்தேகம் கொள்கிறாள். அந்தக் காரை பார்த்த செல்வி ஒருவேளை ராதிகாவைத் தான் கோபி சார் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரோ என கேட்கிறார். பாக்கியாவும் உண்மையாக இருக்குமோ என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். பாக்கியாவிற்கு கூடிய விரைவில் உண்மைகள் அனைத்தும் தெரிய வருமா அல்லது இனிமேலும் பாக்கியா ஏமாந்து கொண்டே தான் இருக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!