தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டு முடிந்து மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகளுடன் காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

முக்கிய தேதிகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக காலதாமதமாக தொடங்கப்பட்ட இந்த கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு சிறப்பு அலகுத் தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், 2022-23 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, தேர்வுகள் குறித்த விவரத்தையும் வெளியிட்டு இருக்கிறார். அதன் படி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கும் எனவும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 26 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் எனவும், டிசம்பர் 19 ஆம் தேதி 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி முடிந்து அதன் பின் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!