திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை புஷ்பயாகம்!
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நாளை வேத மந்திரங்கள் முழங்க 9 டன் மலர்களால் புஷ்பயாகம் நடைபெறவுள்ளது. கோவில் வளாகத்தில் நாளை புஷ்பயாகம் நடைபெற இருப்பதாக திருப்பதி தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவில்:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதிக இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய திருத்தலமாகும். இங்கு பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டதால் கோயில் வருமானமும் குறைந்தது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
TCS, Infosys, Wipro, HCL அள்ளிக் கொடுக்கும் வேலைவாய்ப்புகள் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
மாதந்தோறும் கோயில் இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை திருப்பதியில் புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஆண்டுதோரும் கார்த்திகை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று சுவாமிக்கு புஷ்ப யாகம் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்ப யாகத்தை அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி செய்தனர். ஏழுமலையான் கல்யாண மண்டத்தில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் மூலம் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
IRCTC டிக்கெட் ரத்து செய்வது எப்படி? எவ்வளவு பிடித்தம் செய்யப்படும்? முழு விபரம் இதோ!
அதனை தொடர்ந்து நாளை சாமந்தி, சம்பங்கி, ரோஜா, மல்லி, துளசி, மருதம் உள்ளிட்ட 18 ரகமான 9 டன் மலர்களால் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு 4 மாடவீதியில் சுவாமி வலம் வரும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.