போலி இணையதளங்களில் வாடிக்கையாளர் சிக்க வேண்டாம் – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி எச்சரிக்கை!
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு போலி இணையதளங்கள் மற்றும் பணம் செலுத்தும் இணைப்புகளில் நுழைவதன் மூலம் மோசடியான விஷயங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
மோசடி எச்சரிக்கை:
கொரோனா தொற்று காலத்தில் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு அதிக அளவில் நேரில் செல்வதை தவிர்க்கும் விதமாக அனைத்து வங்கி நிர்வாகத்தினரும் வாடிக்கையாளர்களை ஆன்லைன் முறையில் பரிமாற்றம் செய்வதற்கு ஆலோசனை வழங்கினர். இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்ற நோக்கத்தில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பல மோசடி சம்பவங்கள் தற்போது நடந்து வருகிறது.
ஐபில்லில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் – RCB அணியில் சேர்ப்பு!
2021ம் ஆண்டு பல வங்கி வடிக்கையாளர்கள் மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தனது வாடிக்கையாளர்களை இதுபோன்ற மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. சந்தேகத்திற்குரிய இணையதளங்கள் அல்லது கட்டண இணைப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ டிவீட்டர் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, www.complaintsqueryregister.com என்ற பெயரில் வங்கிக்கு புகார் போர்டல் இல்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதாகவும், இந்த இணையதளம் போலி போர்டல் வங்கியின் லோகோவைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று, வங்கி அனைத்து வாடிக்கையாளர்களிடமும் மோசடி செய்திகளை https://cybercrime.gov.in இல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அனைத்து புகார்களும் வங்கி வழங்கிய அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.