பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், தற்காலிகப் பணியாளர்களுக்கான பணி தொடர்பான முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தற்காலிக பணியாளர்களுக்கான பணி குறித்து வழக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதாவது முதலில் நியமிக்கப்பட்ட பதவியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பதவிக்கு வழக்கமான பணி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், ஒரு ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஒரு பணியில் பணிபுரிந்த பிறகு, அதே பணி செய்ய அனுமதிப்பது அரசின் கடமை என தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் Consultant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
மேலும் ஊழியர்களின் நலனிற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக பணிபுரியும் மனுதாரர்களின் சேவைகளை முறைப்படுத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு, மாநில அரசு அவர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும். சேவைகள் முறைப்படுத்தப்பட்ட ஊழியர்களை சரிசெய்யும் வகையில், துறைகள் வழக்கமான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.