புதுச்சேரியில் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!
புதுவையில் கொரோனா தொற்று காரணமாக அமலில் இருந்த முழு ஊரடங்கு வரும் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு ஒரு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
புதுச்சேரியில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஏப்ரல் 24ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. முன்னதாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடக்கம் – 12ம் மாணவர்களுக்கு தேர்வு எப்போது?
இந்நிலையில் புதுவை அரசு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளையும் அளித்துள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திறக்கலாம். இதை தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை. மேலும், குடிநீர் குழாய், மின்சாரம், வாகனங்கள் பழுது நீக்குதல் போன்ற அடிப்படை சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் இது போன்ற சேவைகளுக்கான கடைகளை திறக்க கூடாது. மின்னணு மற்றும் மின்சாதன உதிரிபாகங்கள், செல்போன் மற்றும் இருசக்கர உதிரிபாகங்களை வீடுகளுக்கு சென்று வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும், எப்எல்1, எப்எல்2 மற்றும் எப்எல்2 சுற்றுலா உரிமம் பெற்ற கடைகள் அனைத்தும் ஜூன் 7ம் தேதி நள்ளிரவு வரை முழுமையாக மூட உத்தரவிட்டுள்ளது. அரசின் விதிகளை மீறுவோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று துணை ஆணையர் சுதாகர் எச்சரித்து உள்ளார்.