கொரோனா பரவல் எதிரொலியாக கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
புதுச்சேரியில் கொரோனா காரணமாக மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் வருகிற 19 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 45000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வருகிற 19 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியர் மாணவர்களுக்கு மேலும் 3 வாய்ப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு !
மேலும் இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுமா? இல்லை நேரடியாக நடைபெறுமா? என்ற அறிவிப்புகளை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.