மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை - பொதுமக்கள் கவனத்திற்கு!
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை - பொதுமக்கள் கவனத்திற்கு!
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் சில மாவட்டங்களில் தடுப்பு பணிகள் முடங்கி விட்டன. அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா எச்சரிக்கை:

தமிழக்த்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை பிறப்பித்தது. ஆனாலும் தொற்று பரவல் குறையவில்லை. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஒரு நாள் பாதிப்பு 30,000 ஐ கடந்தது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. பல்வேறு நோய் தடுப்பு பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா அதிகமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தொலைதூர கல்வியில் PG பட்டம் பெற்றால் பதவி உயர்வு இல்லை!

அதனை தொடர்ந்து அடுத்தகட்ட பணியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. தொற்று பரவல் உச்சத்தில் இருந்த முக்கிய மாவட்டங்களான சென்னை, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தடுப்பு பணிகள் முடங்கி விட்டது என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார். கொரோனா இரண்டாம் அலை குறைந்த வேகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நம் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மூன்றாம் அலை கொரோனா எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் அலட்சியம் காட்டக் கூடாது. தமிழகத்திலும் 21 மாவட்டங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் மக்களின் அன்றாட பழக்க வழக்கங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!