தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு தடை, முழு ஊரடங்கு அமல் – வெறிச்சோடிய சாலைகள்!
தமிழக அரசு மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமையான இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொது போக்குவரத்து மற்றும் பல சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் அதன் மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பாதுகாப்பு பணியில் சுமார் 60,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘கோலங்கள்’ திருச்செல்வம் – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழக தலைநகரான சென்னையில் இன்று அதிக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு மேம்பாலங்கள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 400 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். சோதனையின் போது காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு!
இன்று பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்களும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டியவர்களும் பேருந்து வசதி இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இன்று அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் அனுமதி இல்லை. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக் கடைகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை. பால், மருந்து, பத்திரிகை தவிர வேறு எந்த வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படாது. தியேட்டர்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளும் இன்று திறக்கப்படாது என்று அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.