ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதாவின் உருவ பவனி நடைபெறுவதை முன்னிட்டு நாளை (05.08.2021) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை :
கொரோனா பரவல் காரணமாக காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. கடைகள் வணிக வளாகங்கள், நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திருவிழாக்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவைகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, 30 நாட்களுக்கு பின்னர் தளர்வுகள் – தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா கோயிலில் வருடம்தோரும் நடைபெறும் திருவிழா. கொரோனா தாக்கத்தால் கடந்த வருடம் பக்தர்களுக்கு அனுமதியின்றி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும், கேரள மக்களுக்கு கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர். தொடர்ந்து 10 நாட்கள் திருபலி மற்ற வழிபாடுகள் விமர்சையாக நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து இந்தாண்டு பனிமய மாதா கோயில் திருவிழாவின் ஒரு பகுதியான மாதாவின் உருவ பவனியை முன்னிட்டு நாளை (05.08.2021) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளையும் சமூக இடைவெளியையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.