கருணை பணி உடனடியாக வழங்க நடவடிக்கை – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
கொரோனா பேரலையில் உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு கருணை பணியினை வழங்குவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
கொரோனா மருத்துவப் பணி:
2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்தும் ஸ்தம்பித்த நிலைக்கு சென்று விட்டது. மிகவும் அதிக அளவில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வந்தனர். ஆனால் மருத்துவர்கள் தங்கள் உயிரினை பெரிதான கருகாமல் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைகளை வழங்கி வந்தனர். இதன் காரணமாக பல்வேறு அரசு மருத்துவர்களும் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தது. இந்நிலையில் கொரோனா முதல் அலையில் பணியாற்றிய மருத்துவர் விவேகானந்தன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மனைவிக்கு அரசு வேலை தரப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.
ரயில் பயணிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது!!
வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் விவேகானந்தன் உயிரிழந்து 3 வருடங்கள் கடந்த நிலையிலும் அவரது மனைவிக்கு அரசு பணி இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் வாடி வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கான அரசு பணி ஆணையை உடனடியாக தன் கைகளில் தரவேண்டும் என்றும், அசாதாரண சூழ்நிலைகளில் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப் பட்டை நான்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் டாக்டர் எஸ் பெருமாள் பிள்ளை அவர்கள் அரசுக்கு வைத்துள்ளார்.