அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பதவி உயர்வு இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் விளக்கம்!
அரசு பதவிகளில் பதவி உயர்வு அளிக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதை நியாயப்படுத்தும் தரவுகள் இருக்கின்றனவா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பதவி உயர்வு :
மத்திய அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் பட்டியல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே 2017 ம் ஆண்டு, பொது பிரிவின் கீழ் வரும் பணியாளர்கள் பதவி உயர்வின் போது பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறை சம்பந்தமாக தொடர்ந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் பதவி உயர்வில் செல்லும் மத்திய அரசு பணியாளர்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் அதற்கான பதிவுகள் எங்கே என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அமைச்சகங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 18,989 பேர் பணியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தற்போது தொடரப்பட்ட வழக்கில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதை நியாயப்படுத்தும் தரவுகள் இருக்கின்றனவா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரொக்கப்பரிசு – மத்திய அரசு!
அதனால் மத்திய அரசின் 19 அமைச்சகங்களில் பணியாற்றுபவர்கள் குறித்த தரவுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 19 அமைச்சகங்களில் பணியில் இருப்பவர்களில் 18,989 பேர் (15.34%) எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவர்கள். மொத்த ஊழியர்களில் 7,608 பேர் (6.18%) எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் 21,656 ஊழியர்கள் (17.5%) ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.