தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பதவி உயர்வில் நிபந்தனைகள்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பதவி உயர்வில் நிபந்தனைகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பதவி உயர்வில் நிபந்தனைகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பதவி உயர்வில் நிபந்தனைகள்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதிவு உயர்வு அவர்களின் போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

பதவி உயர்வு:

தமிழக அரசு பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1, குரூப் 2 ,டிஆர்பி, டெட் போன்ற போட்டித்தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணல் மூலம் தேர்வாகிறார்கள். முன்னராக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வானது இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி அடிப்படையில் இருந்து வந்தது. இதனை எதிர்த்து TNPSC மூலம் அதிக மதிப்பெண்கள் எடுத்து பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தியாவில் முடிவுக்கு வரும் கொரோனா 2வது அலை? ஒரே நாளில் 24,354 பேருக்கு தொற்று!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக சார்நிலை பணி விதிகளின் படி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதிவு உயர்வு வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின் அரசு புதிய சட்டம் கொண்டு வந்து மீண்டும் இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு முறைகளில் பதவி உயர்வு விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதையும் ஏற்றுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இதில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சுழற்சி முறையில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டுமே!

இதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு படி மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வரும் 12 வாரத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!