பட்டா மாறுதல் சான்றிதழ்கள் 16 நாட்களில் பெற நடவடிக்கை – தமிழ்நாடு அரசு அதிரடி!

0
பட்டா மாறுதல் சான்றிதழ்கள் 16 நாட்களில் பெற நடவடிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்கள் 16 நாட்களுக்குள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல்:

தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. தற்போது பண பரிவர்த்தனை முதல் அரசு சான்றிதழ்கள் பெறுவது வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதனை தொடர்ந்து தற்போது பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக 16 நாட்களுக்குள் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.

IOB வங்கியில் Counsellor காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.15,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

அதன்படி ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு உரிய நேரத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை சிறப்பு அதிகாரிகள் உறுதி செய்வார்கள். எனவே ஒவ்வொரு தாலுகாவுக்கும் உரிய அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் அனுப்பியுள்ளார். முறைகேடுகள் மற்றும் தாமதமாகுதலை தடுக்கும் நோக்கில் வெளி தாலுகாவை சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!