தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு நடைமுறை சிக்கலானதாகவும், நேரத்தை எடுத்துக் கொள்ளும் விதமாகவும் இருந்தது. ஆனால் தற்பொழுது ஆன்லைனில் சுலபமாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
இந்தியாவில் அனைத்து குடும்பத்தினருக்கும் முக்கிய அடையாளமாக ரேஷன் கார்டு உள்ளது. ஏனெனில் ரேஷன் கார்டு என்பது நாட்டின் குடியுரிமைக்கான சான்றாகும். மேலும் தனி நபரின் மிக முக்கியமான ஆவணங்களுள் இதும் ஒன்றாகும். இதனை பயன்படுத்தி நியாயவிலை கடைகளில் கோதுமை, அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்களை குறைவான விலையில் வாங்க இயலும். இதன் மூலம் சாதாரண மக்கள் மிகவும் பயன்பெறுகின்றனர். தற்போது புதிதாக ரேஷன் கார்டு பெற நினைக்கும் நபர்களுக்கு அதிக நாட்கள் தேவைப்படுகிறது.
2022 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
அதாவது இப்பொழுது உள்ள நடைமுறை மிகவும் சிக்கலாகவும், அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதாகவும் உள்ளது. ஆனால் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் சுலபமாக புதிய ரேஷன் கார்டு பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் ஒரு மாநிலத்தில் உள்ளவர் வேறொரு மாநிலத்திற்கு குடிபெயரும் போதும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட தடை! அரசு உத்தரவு!
ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக திரையில் உள்ள படிவத்தில் விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். இதையடுத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் எரிவாயு பற்றிய இணைப்புகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதையடுத்து நீங்கள் என்பதை கிளிக் செய்து தற்போது கிடைக்கும் Reference எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கொடுக்கப்பட்ட விவரங்களை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இறுதியாக தங்கள் ரேஷன் கார்டு வீட்டுக்கு டோர் டெலிவரி செய்யப்படும்.