2022 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
ஹரியானா மாநிலத்தில் 2022ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற தடுப்பூசிகள் 2 டோஸ் 18 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றில் இருந்து பாதுகாக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் உயிரிழப்பிற்கு வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் டிசம்பர் 27 அன்று பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!
இதையடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தபட்டு வருகிறது. இதன் விளைவாக கொரோனா பரவல் சற்று குறைந்து பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மாநில அரசுகள் தடுப்பு பணியாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர்.
மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட தடை! அரசு உத்தரவு!
அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் 2022ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்கு, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.