10ம் வகுப்பு மதிப்பெண் இல்லாததால் அரசு வேலை பெறுவதில் சிக்கல்? மாணவர்கள் அச்சம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் இன்றி தேர்ச்சி என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிப்பெண் இல்லாத சான்றிதழ் மூலமாக எதிர்காலத்தில் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண் குறிப்பிடாமல் ஆல் பாஸ் என குறிப்பிட்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவைகள் துவக்கம்? அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னீக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் எதிர்காலத்தில் அரசு வேலை பெற 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால் அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என அச்சம் எழுந்துள்ளது. அதே போல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் மதிப்பீடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத காரணத்தால் தொடர்ந்து அவர்களது எதிர்காலமும் கேள்வி குறியாக உள்ளது.