விஜய் டிவி ‘பிக் பாஸ்’ பைனலில் இருந்து விலகும் ப்ரியங்கா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இறுதி சுற்றில் இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் வெளியேறி இருப்பதால் அவர் பைனலில் வருவாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
பிக்பாஸ் இறுதி சுற்று:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த ஆண்டிற்கான சீசன் இன்னும் 2 நாட்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிரியங்கா, நிரூப், ராஜு, பாவ்னி, அமீர் என ஐந்து பேர் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாட வந்தனர். அப்போது பிரியங்கா இருந்த நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் அவர் கன்பெசன் ரூமில் பிக்பாஸ்ஸிடம் பேசினார். எனக்கு மிகவும் உடல்நிலை சரி இல்லை என சொல்ல, பிக்பாஸ் பிரியங்காவை மெயின் டோர் வழியாக வர சொன்னார்.
ஆனால் ப்ரியங்கா அதற்கு மறுப்பு தெரிவித்து கன்பெசன் ரூம் வழியாக வந்தார். பொங்கல் நிகழ்ச்சிகளில் பிரியங்கா இல்லாமல் இருந்ததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். முதல் வாரம் உடல்நிலை சரி இல்லாமல் போனதால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதே போல பிரியங்கா உடல் நிலை சரி இல்லாமல் போனதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வரமாட்டாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டதாக சில தகவல்கள் பரவி வருகிறது. இன்றைய எபிசோடில் அவர் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் விடுமுறை? தீவிர ஆலோசனை!
நாளை பைனல்ஸ் நடைபெற இருப்பதால் பிரியங்கா இறுதி சுற்றில் பிரம்மாண்ட மேடையில் இருக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கையை பதிவிட்டு வருகின்றனர். பிரியங்கா வெளியேறியதால் சில நெகடிவ் கமெண்ட்களும் வருகின்றனர். அவர் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக சிலர் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் யார் வெற்றி மகுடத்தை எடுத்து செல்ல இருக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.