பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !!!

0
பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !!!
பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !!!

பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !!!

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் பெற்றோர் தாமாக முன்வந்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும்,கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் மூலம் தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியும். மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. ஆனால் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனியார் பள்ளிகள் ஊதியம் வழங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு இடைக்கால தடை விதித்து. அந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அரசு தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்துமாறு பெற்றோரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் பெற்றோர் தாமாக முன்வந்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!