மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 1,498 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் வழங்கல்!

0
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 1,498 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் வழங்கல்!
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 1,498 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் வழங்கல்!
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 1,498 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் வழங்கல்!

அரியலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேர்வான 1,498 நபர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் இன்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 56 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை நாடுநர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இந்த முகாம் வாயிலாக பணிக்கு தேர்வான 1,498 நபர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டணம்? – அமைச்சர் அறிவிப்பு!

பின்னர் உரையாற்றிய அவர், மாவட்ட வாரியாக நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக இளைஞர்களின் திறன்களுக்கு ஏற்ப பணி நியமனம் பெற்று வருகின்றனர். இத்தகைய முகாமை பணி திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைய முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

இதன் மூலம் 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். இன்னும் ஓராண்டிற்குள் இந்த தொழிற்சாலை செயல்படும். அப்போது நமது பகுதியில் உள்ளோர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!