தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டணம்? – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரின் பேரில், அனைத்து கல்லூரிகளில் ஒரே கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்லூரி கட்டணம்:
தமிழகத்தில் உயர்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பல முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு, நிரப்ப வேண்டிய காலியிடங்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தமிழகத்தில் ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒவ்வொரு விதமாக கல்லூரிகட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கல்லூரி கட்டணம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.
புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்க தடை நீக்கம் – ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு வெளியீடு!
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கல்லூரி கட்டணம், தேர்வு கட்டணம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான விவரங்களை சேகரிக்க மற்றும் செயல்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்திற்குள் அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி ஆறிவித்துள்ளார்.