தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா முழு ஊரடங்கு காலத்தில், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகைகளை கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடன் தொகை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக பலரது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குடும்பங்களில் வேலை இழப்பு காரணமாக நிதி நெருக்கடி போன்ற பல பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் கடன் கொடுத்த தனியார் நிறுவனங்கள், கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என மிரட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் விரைவில் மீண்டும் திறப்பு – மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு, தற்போது சில தளர்வுகளுடன் அமலில் இருக்கிறது. இதற்கிடையில் அவசர தேவைகளுக்காக தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள், கடன் தவணை மற்றும் வட்டி தொகையை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும் என பல தனியார் நிறுவனங்கள் மிரட்டல் விடுத்து, பொது மக்களை வற்புறுத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்களுக்கு தகுந்த நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கடன் தவணை மற்றும் வட்டி தொடர்பான மிரட்டல்கள் வந்தால், அந்த புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். தவிர மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட பிரிவு – 04633 290822 என்ற தொலைபேசி எண்ணுக்கும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.