TCS, Wipro உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல், பைஜுஸ் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தங்கள் நிறுவனங்களுக்கான புதிய பணியாளர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் ஐடி நிறுவனங்களின் சேவை அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தின் திறனை அதிகரித்துக் கொள்ள அதிக அளவில் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதனால் டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல், பைஜஸ் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தங்கள் நிறுவனங்களுக்கான புதிய பணியாளர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – டிச.24ம் தேதி திருப்புதல் தேர்வு நிறைவு!
இக்கல்லூரியில் டிசம்பர் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். BE, B Tech., M Tech., டிப்ளமோ மற்றும் ITI முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் அவர்களிடம் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல் இரண்டு, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் குறைந்தபட்சம் ஐந்து பயோடேட்டாக்களுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.
ATM, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜன.1 முதல் அமலாகும் விதிமுறைகள்!
மேலும் முதல்வர் ஹெச்பி, நாராயணா குரூப், யுடிஎல், ஓலா, டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா பிசினஸ் ஹப் லிமிடெட், ஜாஸ்மின் இன்ஃபோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் முகாமில் பங்கேற்கும் என்றும் கூறியுள்ளார். டிசம்பர் 23ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டிசம்பர் 24ம் தேதி இரண்டாம் கட்ட நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவு செய்து, தங்கள் பயோ-டேட்டாவை [email protected] க்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான அதிக விவரங்களுக்கு 2778 95931 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.