ATM, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜன.1 முதல் அமலாகும் விதிமுறைகள்!

0
ATM, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - ஜன.1 முதல் அமலாகும் விதிமுறைகள்!
ATM, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு - ஜன.1 முதல் அமலாகும் விதிமுறைகள்!
ATM, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜன.1 முதல் அமலாகும் விதிமுறைகள்!

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்வது அதிகமாகி விட்டது. இது பாதுகாப்பாக இருந்தாலும் சில பேர் அதில் பணத்தை இழந்துள்ளார்கள். இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை

இன்றைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணத்தை சுலபமாக செலுத்தி விட முடிகிறது. இப்பொழுது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக உணவு ஆர்டர் செய்வது, பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, திரையரங்குகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆன்லைன் முறையில் தான் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். இது மிகவும் பாதுகாப்பானதா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இந்த ஆன்லைன் முறையில் பல்வேறு மோசடிகளும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சில பேர் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள்.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு வழங்கிய பாடக்குறிப்பை டவுன்லோட் செய்வது எப்படி?

அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் தற்போது ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும், பரிவர்த்தனை நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை செயல்படுத்த டோக்கன் முறை பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

மீண்டும் பள்ளிகள் மூடல்? மாநில அரசு விளக்கம்! ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு!

பொதுவாக ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு நம்பர், எக்ஸ்பைரி டேட், CVV நம்பர், ஓடிபி போன்ற விவரங்களை உள்ளிட கொடுக்க வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறையின் படி ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப தனியாக டோக்கன் நம்பர் உருவாக்கப்படும். இதனை வங்கியின் வெப்சைட் அல்லது மொபைல் செயலின் மூலமாக பெற முடியும். இதில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிக்கு நிறுவனத்திடமிருந்து கோரிக்கை வைக்கப்படும். அதன்பிறகு தான் பரிவர்த்தனை நடைபெறும். இதனால் பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பாக நடைபெறும் என்றும் இதனை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!