தமிழக சட்டப்பேரவை தேர்தல் – ஏப்ரல் 15 வாக்கு எண்ணிக்கை பயிற்சி!!
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதற்காக வருகிற மே மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கைக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்:
தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதற்காக கடந்த 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தல் கொரோனா நோய்த்தொற்றிற்கு மத்தியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி செல்வதற்கு இ பாஸ் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி மே மாதம் காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதி மேலும் 1,783 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தக்க பாதுகாப்புடன் வேலூர் மற்றும் அணைக்கட்டு ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் அந்த வாக்கு என்னும் மையத்தில் மூன்று அடுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 320 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் வாக்குகளை எண்ணக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
TN TRB தேர்வு முறைகேடு – 9 ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டாய ஓய்வு !
அதன்படி வேலூர், காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய மூன்று தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் 15ம் தேதி விஐடியில் முதற்கட்ட பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட பயிற்சி பின்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.