உஷார் மக்களே.. தமிழகத்தில் நாளை (01.10.2022) இந்த இடங்களில் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (அக் 1) ஆலங்குளம், ஊத்துமலை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை பகுதிகள்:
தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதால் பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மின்தடை குறித்து திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளர் அலெக்ஸாண்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழகக்கலங்கள், கல்லத்திக்குளம், கழுநீர்குளம், ருக்குமணியம்மாள் புரம், பூலாங்குளம், முத்து கிருஷ்ணபேரி, அடைக்கலபட்டணம், பூலாங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மேலும் புளியங்குடி பகுதிகளில், கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பிரேமலதா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புளியங்குடி அய்யாபுரம், சிந்தாமணி, ரத்தினிபுரி, புன்னையாபுரம், இந்திரா நகர், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சிதம்பரபேரி, சங்கனா பேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை நாளை (அக் 1 ) ஏற்படும்.
வாட்ஸ் அப் கால் செய்வதில் இனி புதிய அம்சம் – பயனர்களுக்கு விரைவில் அறிமுகம்!
Exams Daily Mobile App Download
மேலும் வீரசிகாமணி உபமின் நிலையத்திற்கு உட்பட பகுதிகளான வீரசிகாமணி, பாம்பு கோயில், சேர்ந்தமரம், திருமலாபுரம், வட நத்தம்பட்டி, நடுவக்குறிச்சி, அரியநாயகிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனவே இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாளை (அக். 1) மின்தடை காரணமாக வேறு முன் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்