தமிழகத்தில் டிச.28 ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.28 ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.28 ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.28 ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் வரும் 28 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்று மின்தடை ஏற்படும் என்று தேனி மாவட்ட துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 28 மின்தடை:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் கசிவு மற்றும் மின் கோளாறுகள் அடிக்கடி நடைபெறுகிறது. அதனால் மின் கம்பிகளில் பிளவுகள் ஏற்படுவதன் மூலம் அதிக விபத்துக்கள் நடக்கிறது. அதனால் மின்தடை நாள் முழுவதும் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் உள்ளது. இந்த மின்தடை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதன் வகையில் தற்போது தலைமையேற்றுள்ள திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் மின்சார துறை மின்சாரம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் சரி செய்து வருகின்றன.

LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு – இந்த ஆவணம் முக்கியம்!

அதன் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின் துணை நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மக்கள் பாதுகாப்பிற்கும் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும் சில மணி நேரம் மின்தடை ஏற்படும். இந்த மின்தடை பற்றி முன்னதாகவே அந்த மின் துணை நிலையங்களில் உள்ள செயற்பொறியாளர்கள் அறிவித்து விடுவார்கள். இதன் அடிப்படையில் தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் வரும் 28 ஆம் தேதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புதிய காப்பீட்டு திட்டம்!

இந்த பராமரிப்பு மூலம் அந்த பகுதியில் மின்சாரம் சம்பந்தமான குறைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கண்டமனூர் பகுதி முழுக்க மின்தடை ஆகும். தேனியை சுற்றியுள்ள பகுதிகளான அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, வெங்கடாச்சலபுரம், கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி, ஜி.ராமலிங்கபுரம், எம் .சுப்புலாபுரம், சித்தார்பட்டி கோவிந்த நகரம் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!