LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு – இந்த ஆவணம் முக்கியம்!

0
LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு - இந்த ஆவணம் முக்கியம்!
LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு - இந்த ஆவணம் முக்கியம்!
LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு – இந்த ஆவணம் முக்கியம்!

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. LPG மானியம் தற்போது வாடிக்கையாளர்களின் கணக்கில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. ஆனால் மானியம் வராதோர்க்கு ஒரு ஆவணம் முக்கியமாம். இது குறித்து இப்பதிவில் காணலாம்.

ஆதார் தான் முக்கியம்:

மத்திய அரசு நம் நாட்டில் உள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காக தான் இந்த LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அரசு தரப்பிலிருந்து ஒரு ஆண்டிற்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் உபயோகிக்கும் சிலிண்டர் எடை 14.2 கிலோ ஆகும். மத்திய அரசு சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாக அறிவித்திருந்தது. அதன் படி சிலிண்டர் வாங்கும் போது முழு தொகையும் பெறப்படும்.

தமிழகத்தில் டிச.26 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஓமிக்ரான் பரவல் அச்சம்! அமைச்சர் அறிவிப்பு!

பின்பு அதற்கான மானிய தொகை வங்கி கணக்குகளில் வழங்கப்படும். இந்த மானியம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் . இந்த நடைமுறை கடந்த 5 வருடமாக நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வகையில் கொரோனா பரவல் காலங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு ரூபாய் 1000 வரை கொடுத்து மக்கள் சிலிண்டர் வாங்கி கொண்டிருக்கின்றனர். பல்வேறு இடங்களில் சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து குடும்பத் தலைவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சிலிண்டர் விலை குறையவில்லை மற்றும் சிலிண்டர் வாங்குவதற்கான மானியமும் மக்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

மத்திய அரசு நிரந்தரமாக சிலிண்டர் மானியத்தை நிறுத்தப் போவதாக தகவல் வந்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் சிலருக்கு மானியம் வந்ததாகவும் பலருக்கு மானியம் வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் வகையில் விசாரித்தபோது சிலிண்டர் கணக்கில் ஆதார் கார்டு இணைக்காவிட்டால் மானியம் வராது மற்றும் ஆதார் தான் மானியம் வாங்குவதற்கு முக்கியமான ஆவணமாகும் . அதேபோல குடும்பத்தின் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் இருப்பவர்களுக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு சென்று விரிவான தகவலை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!