மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புதிய காப்பீட்டு திட்டம்!
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு இழப்புகளை இழந்து வருகின்றனர். அதனால் அரசு மக்களுக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இதையடுத்து கேரள அரசு தனது ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. கேரளாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க கேரள அரசு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனையை அதிகரித்தல், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துதல் போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் – AICTE அறிக்கை! ஓமிக்ரான் எதிரொலி!
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டமான ‘மெடிசெப்’ திட்டம் ஒன்றை அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு 500 ரூபாய் மாதந்தோறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர் மானியம் பெறாதோர் கவனத்திற்கு – இந்த ஆவணம் முக்கியம்!
இத்திட்டத்தில் இணைவதன் மூலம் ஊழியர்களின் குடும்பத்திற்கு மூன்று வருட பாலிசி காலத்திற்குள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் என மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதில் மாநில அரசு ஊழியர்கள், பகுதி நேர பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உதவி பெறும் பள்ளிகளில் உள்ளவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.