விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் நாளை (மார்ச் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை பெற இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இந்த பராமரிப்பு பணிகளுக்கான காரணங்களாக, மின் கம்பிகளை சரி செய்வது மற்றும் வயர்களின் மேல் அங்கங்கே உயரமாக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவது போன்றவை ஆகும்.
TNUSRB SI வேலைவாய்ப்பு அறிவிப்பு – 444 காலிப்பணியிடங்கள், ஏப்ரல் 7 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் மின்தடை ஏற்படும் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகள் சென்று விடும். அதிகமாக இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மட்டுமே மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
LIC சாரல் பென்ஷன் யோஜனா திட்டம் – ரூ.12,000 வரை ஓய்வூதியம் பெறலாம்!
விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், விருதுநகர் அருகில் உள்ள எரிச்சநத்தம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள இடங்களான, குமிழங்குளம், நடையனேரி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, அக்கனாபுரம், சல்வார் பட்டி, செங்குளம், சிலார்பட்டி, ஐ. மீனாட்சிபுரம், முருகனேரி, அ. கரிசல்குளம், கோட்டையூர், இலந்தைகுளம்,அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, சுப்பாலபுரம், கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.