தமிழகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணி செய்ய உள்ளதால் நாளை மறுநாள் (மார்ச் 3) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை
தமிழகத்தில் பல இடங்களில் அவ்வப்போது மின்கம்பங்களில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்பட்டுவருகிறது. இதனால் அறியாத விதமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டுவிடுகின்றன. மின் கம்பங்களில் மின் கசிவு அதிகமாக மழை காலங்களில் தான் ஏற்படுகிறது. இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய அரசின் சார்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்ல காரணம் இதுதான் – முழு விவரம் இதோ!
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் மின்தடை செய்யப்படுவது இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேறு வேறு நாட்களில் தான் மின்தடை செய்யப்பட்டு மின் இணைப்புகள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. அதே போல மின்தடை செய்யப்படும் பகுதிகள் அனைத்துமே முன்கூட்டியே மக்களுக்கு தெரிவுபடுத்தப்படுகிறது. தற்போது பொன்மனை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உயர்மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணி செய்யவுள்ளதால் வியாழக்கிழமை (மார்ச் 3) அன்று பொன்மனை பகுதிக்கு மின்தடை அறிவித்துள்ளனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் கவனத்திற்கு – மகிழ்ச்சி அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரிய குலசேகரம் பிரிவு உதவி சொற்பொறிவாளர் அறிவித்துள்ள மின்தடை பகுதிகள் இதோ, குலசேகரம் நகர்ப்பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட திருவட்டாறு உயர்மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணி செய்யவுள்ளதால் குளச்சல் விளாகம், ஈஞ்சக்கோடு, பொன்மனை, அயந்தி, கிழக்கம்பாகம், சமாதிநடை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.