தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்ல காரணம் இதுதான் – முழு விவரம் இதோ!
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போருக்கிடையில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வதற்கான காரணம் என்னவென்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
தமிழக மாணவர்கள்
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் பல ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கை பல்வேறு நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கடந்த வாரத்தில் இருந்து ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மார்ச் மாதம் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 13 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!
இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக பல ஆயிரக்கணக்கானவர்கள் உக்ரைனில் வசித்து வந்த நிலையில், தீடீரென மூண்ட போர் காரணமாக பலரால் உக்ரைனை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இரு நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய அரசு இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இப்போது ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அங்கு மருத்துவம் படிக்க சென்றுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து செல்பவர்களும் இந்த எண்ணிக்கையில் சற்று அதிகமாகவே உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்ற விவரங்கள் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 8,000 எம்பிபிஎஸ், 3,000 பல் மருத்துவத்திற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு சுமார் 1,20,000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நீட் தகுதித்தேர்வு எழுதி வருகின்றனர். இப்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சில மாணவர்கள் பொறியியல், வணிகம் உள்ளிட்ட பிற துறைகளை தேர்வு செய்து கொள்கின்றனர்.
ஆனால், மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பை படிக்கிறார்கள். அப்படி வெளிநாடுகளில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் இந்தியாவுக்கு வந்து, அந்தந்த மாநிலத்தில் தகுதித்தேர்வு எழுதி மருத்துவ பணியை மேற்கொள்ளலாம். இதனால் தான் பலரும் உக்ரைன் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில், மருத்துவ படிப்புகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் படித்து முடிக்க ஒரு மாணவருக்கு ரூ.1 கோடி செலவாகிறதாம்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் கவனத்திற்கு – மகிழ்ச்சி அறிவிப்பு!
ஆனால் ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க வெறும் 27 லட்சம் முதல் 40 லட்சம் வரை தேவைப்படுகிறதாம். இதில் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு உக்ரைனில் தான் வழங்கப்படுகிறதாம். இந்த காரணத்தாலேயே இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த எண்ணிக்கை தமிழகத்தில் 3500 முதல் 5 ஆயிரம் வரை இருக்கிறது. இப்போது இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு இல்லை என்றால் எல்லாரும் மருத்துவம் படிக்க முடியும் என்ற கோரிக்கை பலதரப்பட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.