சென்னையில் ஜூலை 15ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!!
சென்னியில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் 9 மாதங்களாக மின்பராமரிப்பு ஏதும் நடைபெறாமல் இருப்பதால் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து 10 நாட்களாக கடந்த மாதத்தில் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளின் விவரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மின்பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.
கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,500 கோடி அபராதம்!
தொடர்ந்து சென்னையில் ஒரு சில பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதாகவும், இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மாலை 5 மணிக்குள் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மதுரவாயல் பகுதியின் எம்.எம்.டி.ஏ காலனி, வரலட்சுமி நகர், கங்கா நகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ்காந்தி நகர், கணபதி நகர், அய்யப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜராஜன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம் ரோடு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.