ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பல மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மண்டபம் பகுதிகளில் ஜூலை 29 (வியாழக்கிழமை) மின்தடை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மாவட்டங்களில் பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் மின்தடை ஏற்பட்டது. இதனால் மாவட்ட வாரியாக பல இடங்களில் மின்வாரிய பணிகள் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிகளில் ஜூலை 29 மின்சார தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட அறிவிப்பின் படி, மண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
ஆகஸ்ட் முதல் ATM பணபரிவர்த்தனை கட்டணம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இதனால் மண்டபம் பகுதி, மறவர் தெரு, ஏகேஎஸ் தோப்பு, காந்தி நகர், மீனவர் காலனி, பாம்பன் முதல் அக்காள் மடம் வரை, மண்டபம் பகுதிகள், வேதாளை, சுந்தரமுடையான், சமத்துவபுரம், அகதிகள் முகாம், சீனியப்பா தர்கா, சதாகோன்வலசை, ஆகிய பகுதிகளில் ஜூலை 29 (நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ரெகுநாதபுரம், பெரியப்பட்டினம், கோரவல்லி, திணைக்குளம், வண்ணாங்குண்டு, தெற்கு காட்டூர், தெற்கு வாணி வீதி, பூசாரி வலசை, கும்பரம்காரான், இருட்டுராணி, முத்துப்பேட்டை, வெட்டிவலசை, தெற்கூர், குண்டூரணி, நயினாமரைக்கான், வண்ணாங்குண்டு.
TN Job “FB Group” Join Now
பத்ராதரவை, சின்னாண்டிவலசை, சேதுக்கரை, உத்தரவை, குத்துக்கல்வலசை, வல்லிமாடன், ஆகிய பகுதிகளிலும், பரமக்குடி 110 கேவி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாலன் நகர், பொன்னையாபுரம், மணி நகர், சிட்கோ, கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூர், எமனேசுவரம், வலையனேந்தல், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளிலும் நாளை (ஜூலை 29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.