தமிழகத்தில் நாளைய மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோயம்புத்தூர் மாவட்ட துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 21 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சார துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறது. நடந்த சட்ட தேர்தலின் போது மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். விரைவில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நேரம் மின் ஊழியர்களின் மற்றும் மின் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து அக்டோபர் 21 ம் தேதி கோயம்புத்தூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தாமஸ் பார்க், காமராஜர் சாலை, பந்தய சாலை, அவினாசி சாலை, புலியகுளம் சாலை ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர் சுசீலா நகர் கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி, கிருஷ்ணசாமி நகர், திருவள்ளுவர் நகர், பாலாஜி நகர், மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 ,மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டில் படுத்தபடியே Netflix இல் படம் பார்க்க ரூ.24 லட்சம் சம்பளம் – சூப்பர் வாய்ப்பு!
மேலும் ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தை தொடர்ந்து கள்ளிமடை துணை மின் நிலையத்திலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் காமராஜர் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜம் நகர், நீலிகோணம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி வி ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரைச் செட்டியார் நகர், என்.ஜி.ஆர் நகர், வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளும் அக்டோபர் 21ம் அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.