ராமேஸ்வரத்தில் நாளை (நவ.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ராமேஸ்வரம் மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை சேதியப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்வோம்.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா பாதுகாப்பான மின்சாரம் வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பின் போது வேலை செய்யும் மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மின்தடை குறைத்து அந்தந்த மாவட்ட செயற்பொறியாளர் மின் பயனர்களுக்கு மின்தடை குறித்து அறிவிப்பு செய்கின்றனர். இதனால் மக்கள் முன்கூட்டியே தகவல் அறிந்து மின் சாதனம் உதவியுடன் செய்ய கூடிய வேலைகளை முடித்து விடுகின்றனர்.
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அடுத்த மாதம் ரூ.4000 – வெளியான சூப்பர் தகவல்!
மின் பராமரிப்பு போது மின் கம்பங்களில் மின் கம்பிகள், வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை சரி பார்த்தல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை ராமேஸ்வரம் மண்டபம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (20.11.2021) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
நவம்பர் 22 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு முக்கிய அறிவிப்பு!
தங்கச்சிமடம்,செம்ம மடம், அரியாங்குண்டு, பேய்கரும்பு, மெய்யம்புளி, பஸ் ஸ்டாண்ட், லட்சுமண தீர்த்தம், திட்டக்குடி தெரு, TV ஸ்டேஷன், மார்க்கெட் தெரு, ரயில்வே ஸ்டேஷன், வேர்கோடு கரையூர், நம்பு கோவில், புதுரோடு, நடராஜபுரம், வடகாடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.