சென்னை மாவட்டத்தில் நாளை (மார்ச் 10) மின்தடை ஏற்பட உள்ள முக்கிய பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் நாளை (மார்ச் 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை பெற இருப்பதாக மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்க படும். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட இருப்பதாக துணை மின் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC, TNUSRB தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
சென்னை மாநகரில் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான போரூர் / திருமுடிவாக்கம் பகுதி, ஆவடி பகுதி, காரனோடை/சோத்துபெரும்பேடு பகுதி, தாம்பரம்/மாடம்பாக்கம் பகுதி, வில்லிவாக்கம் பகுதி, ஆவடி/அலமாதி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின் விநியோகம் தடை செய்ய பட்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் மின்தடை ஏற்பட்ட உள்ள பகுதிகள், போரூர்,திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள 40 அடி ரோடு, மூர்த்தி அவென்யு, லட்சுமி நகர், நல்லீஸ்வரர் நகர், பாலாவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம், ஆவடி பகுதியில் உள்ள சி.டி.எச் ரோடு, முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், ஆவடி பேருந்து நிலையம், பி.வி. புரம் மற்றும் ஆகிய இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள், காரனோடை மற்றும் சோத்துபெரும்பேடு பகுதியில் உள்ள கரோனோடை கடை தெரு, தேவனாரி, வி.ஜி.பி மடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி கடைத்தெரு, மா.போ.சி. நகர், ரெட்டம்பேடு, சோழியம்பாக்கம், அப்பாவரம், மங்காவரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள், நீலாங்கரை, ஏழில் நகர் பகுதியை சுற்றியுள்ள மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்க நகர், நாராயணன் நகர், கோபிநாத் அவென்யு, கிண்டி பகுதியில் உள்ள ஆர்.எம்.டி யார்ட், எம் பிளாக் ராஜ்பவன் பகுதி சர்தார் பட்டேல் ரோடு, அண்ணா சாலை ஆலந்தூர் பகுதி எம்.கே.என் சாலை, சுப்பா ரெட்டி காலனி, காந்தி மார்கெட் புழுதிவாக்கம் பகுதி பாலாஜி நகர், கிராம சாலை, கஸ்தூரிபாய் தெரு, சுவாமி நகர், இந்தியா காலனி, ஜெயா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள், கே.கே நகரை சுற்றியுள்ள க.க நகர் கிழக்கு பிரிவு, எம்.ஜீ.ஆர் நகர் பகுதி, க.க. நகர் மேற்கு பிரிவு, அசோக் நகர் கிழக்கு பிரிவு, க.க நகர் தெற்கு பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள், ஆவடி மற்றும் அலமாதி பகுதியில் உள்ள மோரை சாய்பாபா கோவில், வேல்டெக் காலேஜ், வெள்ளானூர், வேல்டெக் ரோடு (அலமாதி ரோடு) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள், அதனை தொடர்ந்து வில்லிவாக்கம் பகுதியில் இருக்கும் திருவீதி அம்மன் கோவில் தெரு, பஜனை கோயில் தெரு, கிழக்கு மாட தெரு, அம்பேத்கார் தெரு, மூர்த்தி நகர் இடங்களை சுற்றியுள்ள பகுதிகள், தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதி; கே.கே சாலை, கோபாலபுரம், சுசிலா நகர், விஜயநகரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.