சென்னையில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள், மின் கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு நடைபெறுகிறது. சில பகுதிகளில் தொடர் மின்தடை காரணமாக மக்கள் அவதி படுகிறார்கள், இந்த மாதிரியான மின்தடைகளை தடுப்பதற்கும் மின்வாரிய பராமரிப்பு பணிகள் தவறாமல் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த ஆண்டு பதவி ஏற்றுள்ள திமுக கட்சி மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மார்ச் 10 கடைசி நாள்!
இந்த நிலையில் சென்னையில் நாளை( 23.02.2022) அன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். மேலும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்!
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் பூந்தமல்லி பகுதி: ஜே.ஜே. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை ரோடு, ஆவடி ரோட்டில் ஒரு பகுதி, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, வி எஸ் டி, பாரிவாக்கம் சிக்னல் கோவூர் சீனிவாசா நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், சாய் நகர், பாபு கர்டன், கொல்லச்சேரி தெருக்கள் திருவேற்காடு காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, அருணாசலம் நகர் திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், தேவகி நகர், மேத்தா நகர், வழுதலம்பேடு கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.