ஆகஸ்ட் 12ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 12ம் தேதி (நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரங்கள் மற்றும் நேரத்தை மின்வாரியம் வெளியிட்டு உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்திருக்கும் திமுக மீது மின்தடை குறித்த புகார்களும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் பகுதி வாரியாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செப்.1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் உறுதி!
இதனை தொடர்ந்து உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணைமின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது நிர்வாகம்.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு – புதிய துணைவேந்தர் உறுதி!
அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகள் – தேவனூர்புதூர், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், பருத்தியூர், பாண்டியங்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வளையபாளையம், அர்தநாரிபாளையம், அனுமந்தப்பட்டினம், சாலையூர், கொடுங்கியம், தீபாலபட்டி, கரட்டுமடம், ஜிலோபிநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.