அண்ணா பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு – புதிய துணைவேந்தர் உறுதி!
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஆக ஆர்.வேல்ராஜ் அவர்கள் பதவியேற்று உள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோபல் பரிசு பெறும் அளவிற்கு பயிற்சி வழங்கப்படும் என உறுதிபட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பயிற்சி:
அண்ணா பல்கலைக்கழகமானது உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி காணப்படும் என துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு புது முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
T20 உலக கோப்பைக்கு பின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் ரவி சாஸ்திரி? புதிய தகவல்!
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி கற்பித்தல் முறை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களின் படிப்பு முடிந்ததும் அவர்களாகவே தொழில் தொடங்கும் வகையில் அவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கூறினார். தொழில் துறைக்கு தேவையான தகுதிகள் உடன் மாணவர்களை உருவாக்க கவனம் செலுத்துவதாக உறுதி அளித்துள்ளார். தற்போது வரை உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மதிய உணவு திட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு – அதிகாரிகள் ஆலோசனை!
அறிவியல், பொறியியல் படிப்புகளை தொடர்ந்து ஆராய்ச்சி படிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். அகில இந்திய அளவில் 2030ம் ஆண்டில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் 50% என உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 50% விகிதத்தை எட்டி விட்டோம் எனவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து நோபல் பரிசு பெறும் அளவிற்கு பயிற்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.