தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைப்பு – அமைச்சர் கூறிய விளக்கம்!

0
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைப்பு - அமைச்சர் கூறிய விளக்கம்!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைப்பு - அமைச்சர் கூறிய விளக்கம்!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைப்பு – அமைச்சர் கூறிய விளக்கம்!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 25) முதல் தொடங்கப்பட இருக்கும் நிலையில், நீட் தேர்வு முடிவில் ஏற்படும் கால தாமதம் காரணமாக தள்ளி வைக்க இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு தள்ளி வைப்பு:

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலமாக நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440 க்கு மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள 1.60 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 25 (நாளை) முதல் தொடங்க இருப்பதாக ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பொது கலந்தாய்வு தள்ளி வைக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாளை முதல் பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா – அமைச்சர் பேட்டி!

Exams Daily Mobile App Download

சி.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் தாமதமாக வந்ததால் விண்ணப்பிக்கும் கால அவகாசம் கூடுதலாக 5 நாட்கள் வழங்கப்பட்டது. மேலும் நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டால், பொறியியல் படிப்பில் சேரும் பல மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சென்றுவிடுவார்கள். சென்ற ஆண்டு அதனால் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல இடங்கள் காலியாக இருந்தது. எனவே நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால் பொறியியல் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த முடிவானது மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் இரண்டு நாட்களில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!