தமிழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்விற்கான தேதி தள்ளிவைப்பு – அறிவிப்பு வெளியீடு!
நீட் தேர்விற்கான முடிவு செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்விற்கான தேதி மாற்றியமைக்கபட்டுள்ளது. அதாவது தேர்வு முடிவு வெளியாகி இரண்டு நாட்களுக்கு பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:
தமிழகம் முழுவதும் 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதாவது, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. பின்னர், பொது பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு இடையே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp ல் இனி Screenshot எடுக்க தடை? வரவிருக்கும் புதிய அப்டேட்!
இதனால், நீட் தேர்வு முடிவிற்கு பிறகு பொது பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நீட் தேர்வு முடிவு வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகே கலந்தாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது பிரிவிற்கான கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்க்கான கலந்தாய்வும் செப்டம்பர் 10- ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இரண்டு வாரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வு நடத்தப்பட்டு 2 மாதங்களுக்கு பிறகே தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு விருப்ப இடங்கள் தேர்வு செய்யப்படும் எனவும், அதற்கு பின்னர் இறுதியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு நவம்பர் இரண்டாவது வாரத்துக்கு பிறகு தான் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்