தமிழகத்தில் கனமழை எதிரொலி.. இன்று (நவ.11) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு – பல்கலை அறிவிப்பு!
தமிழகத்திற்கு இன்று முதல் வருகிற 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தற்போது வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி நகர்ந்து கொண்டு வருவதால் இன்று முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இன்று பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
Follow our Instagram for more Latest Updates
அதன் காரணமாக இன்று (நவ.11) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TNDTE தமிழகத்தில் மீண்டும் தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை, நாளை மறுநாள் நடைபெற இருந்த TNDTE தட்டச்சு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.