தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ வெளியீடு!!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 62 சதவீதம் பேர் மட்டுமே தபால் வாக்குப்பதிவு செய்துள்ளனர். மீதம் 38 சதவீத வாக்குகளை விரைந்து செலுத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தபால் வாக்கு:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவுக்கான தேர்தல் பணிகளில் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெருமளவு பங்காற்றியிருந்தனர். தேர்தலின் போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குப்பதிவை செலுத்த முடியாததால் தபால் வாக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணிகளில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 9,235 பேர் ஈடுபட்டனர். இதில் தபால் வாக்குப்பதிவை செலுத்தியவர்கள் மார்ச் 26 ஆம் தேதி அடிப்படையில் 31% மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதியில் 16% வாக்குகள் அடிப்படையில் இதுவரை 47% தபால் வாக்குகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இடையில் 16% பேர் அஞ்சல் வழியில் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுளள்து. அதன்படி 62% பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் கூறுகையில், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை கவனமாக பதிவு செய்து அஞ்சல் வழியாக தான் அனுப்ப வேண்டும். அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் தபால் வாக்குகளை கவனமாக பதிவு செய்து அருகிலுள்ள அஞ்சலகங்கள் வழியாக அனுப்ப வேண்டும்.
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆணையர் தகவல்!!
முன்பு போல தற்போது வாக்குகளை இலவசமாக அனுப்ப முடியாது. ராணுவம் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே இலவச அஞ்சல் அனுப்ப முடியும். அதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் வில்லை ஒட்டாத சாதாரண தபால் மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்காக கணக்கு தனியாக பராமரிக்கப்படும். எனவே உடனடியாக தபால் வாக்குகளை பதிவு செய்து உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று அஞ்சல் வழியாக வாக்குகளை அனுப்புங்கள்’ என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்