மூத்த குடிமக்களுக்கான சிறந்த அஞ்சல் அலுவலக திட்டம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
பொதுவாக மக்கள் பலர் தங்களுடைய முதுமை காலத்தில் பண தேவை ஏற்படாமல் இருக்க நல்ல முதலீடு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிடுகின்றனர். அவர்களுக்காக இந்திய அஞ்சல் துறையில் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. அதில் அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 5 ஆண்டுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும். மேலும் அவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
தஞ்சாவூர் விமானப்படை பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க மார்ச் 17 கடைசி நாள்!
தற்போது, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டி கிடைக்கிறது.ஒருவர் SCSS இல் அதிகபட்சமாக ரூ. 30,00,000 முதலீடு செய்யலாம், குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 1000 ஆகும். இந்தத் திட்டத்தில், காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படுகிறது.60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், விஆர்எஸ் எடுக்கும் சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வயது தளர்வு வழங்கப்படுகிறது.